அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடையா?


அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் அதிரையில் கேரிபேக் எனப்படும் பிளாஸ்டிக் பை உபயோகம் பேரூராட்சி மன்றத்தால் மார்ச் 5,2012 முதல் தடைசெய்யப்பட்டுள்ள செய்தி நாம் யாவரும் அறிந்ததே.

அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர்.அஸ்லம் அவர்கள் இது குறித்து நம்மூரில் நடைபெற்ற பல்வேறு பள்ளி விழாக்களின் போதும்,திருமண நிகழ்வுகளின் போதும் மக்களிடம், பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை தடுப்பதன் மூலம் நம் அதிரையை சுகாதரமான ஊராக மாற்ற முடியும் என்ற வேண்டுகோளை தொடர்ந்து விடுத்து வந்தார்.

மேலும் ஆட்டோ விளம்பரத்திலும்,இனியும் பிளாஸ்டிக் பை உபயோகிப்போர் மீது பேரூராட்சி மன்றத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டு,சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.அதை அறிந்ததும் இனி அதிரைக்கு நல்லது நடக்கும் என்ற மகிழ்ச்சி பரவலாக நம் மக்களிடையே காணப்பட்டது.

ஆனால் வெகுசில கடைகளைத் தவிர மற்ற எல்லா கடைகளும் பிளாஸ்டிக் பை உபயோகத்தை இன்னும் நிறுத்திய பாடில்லை.அதுவும் சேர்மன் அவர்களின் பகுதியிலுள்ள கடைகளில் கூட எந்த அச்சமோ தங்கு தடையோ இன்றி பிளாஸ்டிக் பைகள் உபயோகம் ஜரூராக நடக்கிறது.இது மிகவும் வேதனையான செய்தியாகும்.

எனவே நம் நலனையும்,நம்மூர் நலனையும் கருத்தில் கொண்டு மக்களும்,வணிகர்களும் பேரூராட்சி மன்றத்திற்கு ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே,குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும் இதை மீறுவோர் மீது பாரபட்சம் பார்க்காமல் பேரூராட்சி மன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறும் சட்டம் போட்டோ,உத்தரவு பிறப்பித்தோ எந்த ஒரு செயலையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது,மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே எல்லாம் சாத்தியமாகும்.எனவே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிரையில் பிளாஸ்டிக் பைக்கான தடை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.இதுவே அனைத்து அதிரைவாசிகளின் அவா ஆகும்.

பிளாஸ்டிக் பை உபயோகிப்பதால் நமக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன.அது பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
அன்புடன்,
அதிரைகுருவி

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.