இந்தியாவில் உடல்பருமனுள்ள குழந்தைகள்!




இந்தியாவில் உணவு பழக்கம் மாறி வருவதாலும்,ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் 20% குழந்தைகள் குண்டாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்டு வாழ்நாள் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் மாறி வரும் உணவு பழக்கம் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகள் குறித்து போர்ட்டிஸ் டயபடீஸ் மையம் மற்றும் போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது. இதில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
  • உணவு பழக்கம்உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது.
  • இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். 
  • ஃபாஸ்ட்புட்ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • 9-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் சதவீதத்தினர் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. 
  • நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல்கம்ப்யூட்டர் கேம்வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர். 
நமது பாரம்பரிய உணவுகள் குறைந்த கொழுப்பு உள்ளவைஉடலுக்கு ஆரோக்கியமானவைநார்ச் சத்து அதிகம் உள்ளவைஊட்டச்சத்து நிறைந்தவை. இதில் இருந்து விலகிப் போகும் நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்துஇனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள்ஃபாஸ்ட்புட்ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். 

குண்டாக இருக்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் வயதான பிறகும் குண்டாகவே இருப்பார்கள்இவர்களுக்கு டயபடீஸ்அதிக ரத்த அழுத்தம்இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாகஇன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.